search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடக்க விழா"

    ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் உலககோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழா இன்று மாலை நடைபெற்றது. #HockeyWorldCup2018 #HWC2018
    புவனேஸ்வர்:

    14-வது உலககோப்பை ஹாக்கிப்போட்டி ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரத்தில் நாளை (28-ம் தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 16-ந்தேதி வரை அங்குள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

    அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரான்ஸ், நியூசிலாந்து (‘ஏ’ பிரிவு), நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா (‘பி’ பிரிவு), இந்தியா, பெல்ஜியம், தென்ஆப்பிரிக்கா, கனடா (‘சி’ பிரிவு), நெதர்லாந்து, ஜெர்மனி, பாகிஸ்தான், மலேசியா (‘டி’ பிரிவு) உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    வரும் 9-ம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிகின்றன. 2-வது சுற்று 10 மற்றும் 11-ம் தேதியும், கால்இறுதி 12 மற்றும் 13-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. 15-ம் தேதி அரை இறுதியும், 16-ம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கிறது.

    மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    இந்நிலையில், ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரத்தில் உலககோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை  கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஒடிஷா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பங்கேற்றார். 

    இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி மற்றும்  ஷாருக் கான், மாதுரி தீட்சித் ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. #HockeyWorldCup2018 #HWC2018
    திருவண்ணாமலை தனி மாவட்டமாக உதயமாகி 30-ம் ஆண்டு தொடக்க விழா கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. மேலும் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
    திருவண்ணாமலை:

    வட ஆற்காடு மாவட்டம் 1989-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டமாகவும், வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு மாவட்ட பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.

    திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சீபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும், மேற்கே தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் சூழ்ந்து உள்ளது.

    இந்த மாவட்டம் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு அருணாசலேஸ்வரர் கோவில், ரமண மகரிஷி ஆசிரமம், சாத்தனூர் அணை போன்றவை உள்ளது. இந்த மாவட்டம் தனி மாவட்டமாக உதயமாகி 29-ம் ஆண்டுகள் நிறைவடைந்து, 30-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழா நடைபெற்றது. மேலும் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.



    தொடக்க விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டார். இதில் திருவண்ணாமலை மாவட்ட முக்கிய பகுதிகளின் படங்கள், வரலாற்று சின்னங்களின் படங்கள் போன்றவை இடம் பெற்று இருந்தன.

    இதையடுத்து கேழ்வரகு, வெல்லம், நிலக்கடலை ஆகியவற்றினால் செய்யப்பட்ட பாரம்பரிய உணவால் செய்யப்பட்ட கேக்கை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கலெக்டர் வெட்டினார்.

    பின்னர் 30-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மன் படம் அச்சிடப்பட்ட சிறப்பு தபால் தலையை கலெக்டர் வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்று கொண்டனர்.

    இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம், மலைவாழ் மக்கள் நடனம் போன்றவை நடைபெற்றது.

    முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடந்தது. மேலும் குழந்தைகள் வளர்ச்சி துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் என்ற தலைப்பில் நாடகம் நடைபெற்றது. பின்னர் அரசு அலுவலர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ்களை வழங்கினார். விழாவை முன்னிட்டு கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட உயர் அதிகாரிகள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வந்து இருந்தனர்.

    இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இம்மாத இறுதியில் நடக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதில் கலந்து கொள்கிறார்.#Chennai #Metro #EdappadiPalanisamy
    சென்னை:

    சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளில் சுரங்கப்பாதையில் நிறைவடைந்த பணிகளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்து வருகிறார். கடந்த 14 மற்றும் 15-ந்தேதிகளில் ஷெனாய்நகர் 2-வது வழிப்பாதை மற்றும் நேரு பூங்கா- எழும்பூர் இடையிலான பணிகளை ஆய்வு செய்தார். இந்த பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்வது உள்ளிட்ட சில ஆலோசனைகளை பாதுகாப்பு ஆணையர் கூறினார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே பாதுகாப்பு ஆணையர் டிராலியில் சென்று ஆய்வு செய்கிறார். தொடர்ந்து மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி சோதனை செய்கிறார். இந்தபணி 2 நாட்கள் நடக்கிறது. இதனை தொடர்ந்து 19-ந்தேதி (சனிக்கிழமை) ஆய்வுப்பணியை முடித்துக்கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூரு திரும்ப இருக்கிறார்.

    பாதுகாப்பு ஆணையர் ஆய்வுப் பணியை முடித்துவிட்ட பிறகு, பயணிகள் ரெயிலை முறைப்படி இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதனை தொடர்ந்து நேரு பூங்கா- சென்டிரல் மற்றும் சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இதற்கான விழா எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெறும்.



    இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளவார்கள்.

    29-ந்தேதி பவுர்ணமியாக இருப்பதால் அன்று மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். #Chennai #Metro #EdappadiPalanisamy
    ×